ஜும்ஆவில் உறங்குபவரை எழுப்புபவர் வீணான காரியத்தை செய்தவராக கருதப்படுவாரா?

📅 2021-06-04✍ Aasif
தொழுகை✍ இப்ன் பாஸ்
🗂 தொழுகை
👤 இப்ன் பாஸ்
கேள்வி:ஜும்ஆவில் உறங்குபவரை எழுப்புபவர் வீணான காரியத்தை செய்தவராக கருதப்படுவாரா? பதில்: செயலால் அவர்களை எழுப்ப முடியும். பேசுவதன் மூலம் அவர்களை எழுப்பக்கூடாது. ஏனெனில் குத்பா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பேசுவது கூடாது. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய். (ஸஹீஹ் புகாரி : 934) அவர் நன்மையான ஒரு விடயத்தை ஏவக்கூடியவராக இருந்தும் அவரை நபியவர்கள் வீணான காரியத்தைச் செய்யக் கூடியவராக குறிப்பிட்டுள்ளார்கள். எனவே குத்பா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அவசியம் மௌனமாக இருக்க வேண்டும் என்பதையும், பேசுவது ஹராமாக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. பதிலளித்தவர்: அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் மஜ்மூஉல் பதாவா (30/252) மொழிபெயர்ப்பு:அஸ்கி அல்கமி(இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)
மூலம்: https://islamqatamil.com/%e0%ae%9c%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81/
← ஃபத்வா பட்டியலுக்கு திரும்பு