பெண்கள் ஒன்றுகூடினால், அவர்கள் ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவது கடமையா? ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுவது குற்றமாகுமா ?

📅 2023-10-07✍ Aasif
தொழுகை✍ இப்ன் பாஸ்
🗂 தொழுகை
👤 இப்ன் பாஸ்
கேள்வி: ஒரு இடத்தில் பெண்கள் ஒன்றுகூடினால், அவர்கள் ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவது கடமையா? ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுவது குற்றமாகுமா ? பதில்: 🎙️ ஷைய்ஃக் இப்னு பாஸ் (ரஹி) கூறிகின்றார்கள். ▪️ ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுவதால் தவறில்லை.காரணம் பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை கடமை அல்ல. ▪️ ஆண்களுக்கு ஜமாஅத் தொழுகை கடமையாகும். ▪️ ஆனால், பெண்களில் அதிக கல்வியுள்ளவர்களும் ஞானமுள்ளவர்களும் இருப்பார்கள் எனில் அவர்களை இமாமாக நிறுத்தி ஜமாஅத்தாக தொழுவது நல்லதும் சிறந்ததும் ஆகும். ▪️ காரணம் அது மற்றவர்கள் கற்றுக் கொள்ளவும் தெரிந்து கொள்ளவுதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும். ▪️ உம்முஸலமா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுதுள்ளார்கள். ▪ சுருக்கமாக சொன்னால் அல்குர்ஆனை நன்றாக ஓதுகின்ற கல்வி உள்ள பெண்களாக இருந்தால் மற்ற பெண்களுக்கு இமாமாக நின்று ஜமாஅத்தாக தொழுவது சிறந்ததும் நல்ல செயலும் ஆகும். ▪️ காரணம் இந்த செயல், தொழுவதற்கு தெரியாதவர்களுக்கு தொழுகை கற்றுக்கொடுக்க ஒரு வாய்ப்பாகும். ▪️ எப்படி குகூஉ செய்ய வேண்டும், எப்படி உள்ளச்சத்தோடு சரியாக தொழுவது,தொழுகை முறை ஆகியவைகளை அவர்களால் தெரிந்து கொள்ள முடியும். ▪️ ஜமாஅத்தில் இமாமாக நிற்கும் பெண்,தன்னோடு தொழுகையில் நிற்கும் பெண்களோடு அதே ஸஃப்ஃபில், நடுவில் நிற்க வேண்டும்.மாறாக ஒரு ஸஃப் முன்னால் நிற்ககூடாது. ▪️ மஃக்ரிப், இஷா மற்றும் ஃபஜ்ர் தொழுகைகளில் ஆண்களைப் போல் பெண் இமாமாக நின்றால் சத்தமாக ஓதலாம். ▪️ பெண்கள் அனைவரும் ஜமாஅத்தாக தொழாமல் தனித்தனியாகத் தொழுகிறார்கள் என்றாலும் அதில் எந்த தவறும் இல்லை, அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் சரி. 📽️அரபி மூலம் : https://bit.ly/2MdLt64 மொழிபெயர்ப்பு: கற்கைக்கூடம் Telegram Channel
மூலம்: https://islamqatamil.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85/
← ஃபத்வா பட்டியலுக்கு திரும்பு