ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

📅 2023-03-12✍ Aasif
நோன்பு
🗂 நோன்பு
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 6️⃣ : ஒருவர் சஹர் சாப்பிடும் போது, ​ (தொழுகைக்கான) பாங்கு சொல்லப்படுவதை கேட்டால், அவரது வாயில் உள்ள உணவுகளை அகற்ற வேண்டுமா.? அல்லது அவர் அதனை சாப்பிட்டு முடிக்கலாமா..!? பதில் : அவரது வாயிலுள்ள உணவுகளை வெளியேற்றத் தேவையில்லை; அதேசமயம் (அந்த உணவிற்கு பிறகு) அவரிடம் இருக்கும் தண்ணீரை தவிர வேறெதும் சாப்பிடக் கூடாது. நபி (صلى الله عليه و سلم) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிப்பதாவது : إذا سمِعَ أحدُكم النداء ، و الإناء على يده ، فلا يضعه ، حتى يقضي حاجته منه “உங்களில் ஒருவர் தம் கையில் உணவுப் பாத்திரம் இருக்கும் நிலையில், அதான் (பாங்கு) சொல்லப்படுவதை செவியேற்றால், உணவருந்தி முடிக்கும் வரையிலும் அவர் அந்த பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்”. (நூல் : ஸுனன் அபுதாவூத்) ஆகையில், அந்நபர் மீது எவ்வித குற்றமுமில்லை. 📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
மூலம்: https://islamqatamil.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%87-3/
← ஃபத்வா பட்டியலுக்கு திரும்பு