ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

மரணச் செய்தியைக் கேட்டவுடன் ''இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்'' என்று சொல்வதற்கு ஆதாரம் உண்டா? எந்தச் சூழ்நிலைகளில்

மரணம் துஆ குர்ஆன்

← முந்தையஅடுதது →
கேள்வி
மரணச் செய்தியைக் கேட்டவுடன் ''இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்'' என்று சொல்வதற்கு ஆதாரம் உண்டா? எந்தச் சூழ்நிலைகளில் இதைக் கூற வேண்டும்?
பதில்
பதில்:

மரணச் செய்தியைக் கேட்டவுடன் ''இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்'' என்று சொல்வது அல்குர்ஆனில் நேரடியாகச் சொல்லப்பட்ட ஒரு அம்சமாகும். "முஃமின்களை ஓரளவு அச்சம், பசி, பொருளாதாரம், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் சோதிப்போம்" என்று கூறும் அல்லாஹ், அப்போது பொறுமை காப்பவர்களுக்கு நன்மாராயம் கூறுமாறும் அறிவுறுத்துகிறான். தங்களுக்குச் சோதனை வரும்போது அவர்கள், "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; மேலும் நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்" என்று கூறுவார்கள் என குர்ஆன் குறிப்பிடுகிறது.

எனவே, இந்த வார்த்தை மரணத்திற்கு மட்டுமல்ல; வியாபார நஷ்டம், நோய்கள், விபத்துக்கள் போன்ற அனைத்து விதமான சோதனைகளுக்கும், கவலைகளுக்கும் கூறப்பட வேண்டிய வார்த்தையாகும். தமக்கு ஏற்படும் சோதனைகளுக்கு மட்டுமன்றி, பிறருக்கு ஏற்படும் சோதனைகளைக் கேள்விப்படும்போதும் அவர்களுக்கு ஆறுதலாக இதனைக் கூறலாம். எல்லாவற்றுக்கும் நாம் இறைவனிடமே மீளவிருக்கிறோம் என்ற ஈமானிய உணர்வை இது வெளிப்படுத்துகிறது.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →