ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

முஸ்லிம் அல்லாதவர்களுக்காக (காஃபிர்கள்/முஷ்ரிக்குகள்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது நாம் எவ்வாறான பிரார்த்தனைகளைச் செய

துஆ

← முந்தையஅடுதது →
கேள்வி
முஸ்லிம் அல்லாதவர்களுக்காக (காஃபிர்கள்/முஷ்ரிக்குகள்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது நாம் எவ்வாறான பிரார்த்தனைகளைச் செய்ய மார்க்கத்தில் அனுமதி உள்ளது?
பதில்
பதில்:

முஸ்லிம் அல்லாதவர்கள் உயிருடன் இருக்கும்போது உலக விஷயங்களுக்காக அவர்களுக்காகப் பிரார்த்திப்பதில் மார்க்க ரீதியாக எவ்விதத் தடையுமில்லை. உதாரணமாக, அவர்களுடைய வியாபாரம் சிறப்பாக நடக்க வேண்டும், அவர்களுக்கு ஆரோக்கியம் கிடைக்க வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அல்லது நஷ்டத்திலிருந்து நீங்க வேண்டும் போன்ற உலக நலன்களுக்காகத் தாராளமாகப் பிரார்த்திக்கலாம்.

மேலும், அவர்களுக்கு நேர்வழியைக் கொடுக்க வேண்டும் (ஹிதாயத்) என்றும் துஆச் செய்யலாம். அவர்களது உடல் ஆரோக்கியத்திற்காகப் பிரார்த்திக்கும் அதே வேளையில், "அல்லாஹ் இந்த ஆரோக்கியத்தை அவர்களுக்கு நீட்டித்து, இதன் மூலம் இஸ்லாத்தைத் தெரிந்துகொண்டு இஸ்லாத்திற்கு வரக்கூடிய வாய்ப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும்" என்று கேட்பது மிகச் சிறந்த ஒரு பிரார்த்தனை முறையாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →