ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

நோன்பு காலத்தில் தூக்கத்தில் அல்லது சிந்தனையால் இந்திரியம் (விந்து) வெளிப்பட்டால் நோன்பு முறியுமா?

நோன்பு இந்திரியம் ஹலால் ஹராம் இல்லறம்

← முந்தையஅடுதது →
கேள்வி
நோன்பு காலத்தில் தூக்கத்தில் அல்லது சிந்தனையால் இந்திரியம் (விந்து) வெளிப்பட்டால் நோன்பு முறியுமா?
பதில்
பதில்:

நோன்பாளியாக இருக்கும் போது தூங்குகிற நேரத்தில் சில பொழுதுகளில் பாலுணர்வு சிந்தனைகள் வந்து ஸ்கலிதம் (விந்து வெளியேறுதல்) ஏற்பட்டால் நோன்பு முறியாது. ஆனால், விழித்திருக்கும் போது அவரது செயல்பாட்டின் காரணமாக, அதாவது மனைவியை அணைப்பதன் மூலமோ அல்லது முத்தமிடுவதன் மூலமோ இந்திரியம் வெளியானால் அவரது நோன்பு முறிந்துவிடும். ஒரு சொட்டு விந்து வெளியானாலும் சரி, நோன்பு முறிந்துவிடும்.

இந்த நோன்பு முறிந்துவிட்டால் அவர் அந்த நோன்பைக் கழா (பதிலாக நோற்பது) செய்ய வேண்டும். ஆனால் பரிகாரம் (கஃப்பாரா) செய்யத் தேவையில்லை. பகலில் மனைவியுடன் உடலுறவு கொண்டால் மட்டுமே கழாவுடன் சேர்த்துத் தொடர்ச்சியாக நோன்பு நோற்கும் பரிகாரமும் அவசியமாகும். உடலுறவு இன்றி முத்தமிடுவது அல்லது அணைப்பது போன்றவற்றால் விந்து வெளிப்பட்டால் குளிப்பது கடமையாகிவிடும், நோன்பு முறிந்துவிடும், கழா செய்ய வேண்டும், ஆனால் பரிகாரம் தேவையில்லை.

மேலும், மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட சுய இன்பத்தின் மூலமாக விந்து வெளிப்பட்டாலும் நோன்பு முறிந்துவிடும்; அதற்கும் கழா செய்ய வேண்டும். சுருக்கமாக, தூக்கத்தில் ஏற்படும் ஸ்கலிதத்தால் நோன்பு முறியாது; ஆனால் விழித்திருக்கும் நிலையில் செயல்பாடுகளின் காரணமாக விந்து வெளிப்பட்டால் நோன்பு முறிந்துவிடும்.

← முந்தையஅடுதது →