ஒருவர் உதவி செய்கிற நேரத்தில் "ஜஸாக்கல்லாஹு ஹைரா" என்று சொல்வதும், பிரயாணத்தின் போது "ஃபீ அமானில்லாஹ்" என்று சொல்வதும் கட்டாயமான சுன்னாக்களோ அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த துஆக்களோ அல்ல.
ஜஸாக்கல்லாஹு ஹைரா:
இந்த வார்த்தையைச் சிறப்பித்து வந்த இரண்டு ஹதீஸ்களுமே பலவீனமானவையாகும். இருப்பினும், சஹாபாக்கள் காலத்தில் யாராவது உதவி செய்தால், இவ்வாறு நன்றி கூறும் ஒரு சிறந்த வழக்கம் இருந்துள்ளது. இது நபிகளார் பிரத்தியேகமாகக் கற்றுக்கொடுத்ததோ அல்லது அவர் சிறப்பித்துக் கூறியதோ அல்ல; இது ஒரு நல்ல சமூக வழக்கமாகும். ஒருவர் உதவி செய்யும் போது, அவருக்கு "அல்லாஹ் நல்ல கூலி வழங்குவானாக" (ஜஸாக்கல்லாஹு ஹைரா) என்றோ அல்லது "பாரக்கல்லாஹு" என்றோ எதனையும் நல்வாழ்த்தாகக் கூறலாம்.
ஃபீ அமானில்லாஹ்:
இதே போன்றுதான் பிரயாணத்தின் போது கூறப்படும் "ஃபீ அமானில்லாஹ்" (அல்லாஹ்வின் பாதுகாப்பில் செல்லுங்கள்) என்ற வார்த்தையும். இது நபிகளார் வீட்டுக்கு வருபவர்களைப் பார்த்து "மர்ஹபா" என்று கூறியது போல, ஒரு நல்ல சமூக வழக்கமாக இருந்து வந்துள்ளது.
சுருக்கமாக, இவற்றை நல்வாழ்த்தாகக் கூறுவது தவறல்ல; இது ஒரு நல்ல வளமையாகும். ஆனால், இவற்றை கட்டாய சுன்னா என்றோ, இதை சொல்லாவிட்டால் அல்லது வார்த்தைகள் மாறினால் மார்க்கத்தில் பிழை என்றோ நம்புவதுதான் தவறாகும்.