கேள்வி
பல லட்சம் பெறுமதியான ஒரு வீட்டை வங்கிக் கடன் (Loan) மூலம் வாங்கியிருந்தால், அந்த வீட்டிற்கு ஸகாத் கொடுக்க வேண்டுமா?
பதில்
பதில்:
இல்லை, கடன் மூலம் வாங்கப்பட்ட வீட்டிற்கு ஸகாத் கிடையாது. பொதுவாக நாம் குடியிருக்கும் சொந்த வீட்டிற்கு மார்க்கத்தில் ஸகாத் கடமையில்லை. ஒருவேளை வியாபார நோக்கம் இல்லாமல் உபரியாக வீடுகள் வைத்திருந்தாலும் அதற்கும் ஸகாத் இல்லை.
மேலும், வங்கிக் கடன் (Loan) என்பது கடனோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாகும். வட்டி அடிப்படையிலோ அல்லது வட்டி இல்லாத அடிப்படையிலோ கடனாக எடுக்கப்பட்ட எந்தவொரு தொகைக்கும் ஸகாத் கிடையாது (வட்டி அடிப்படையில் எடுப்பது ஹராம் என்பது வேறு சட்டம்). கடன் அடிப்படையில் வாங்கப்படுகின்ற வீட்டிற்கும் குடியிருக்கும் வீட்டிற்கும் ஸகாத் கிடையாது என்பதே தெளிவான மார்க்கச் சட்டமாகும்.