எந்த நாட்டிலும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத நிலையில், வசதியான வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக "எனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது, கொன்றுவிடுவார்கள்" என்று பொய் சொல்லி அகதியாகப் பதிவது மார்க்க ரீதியாக முற்றிலும் தவறானதும் கண்டிக்கத்தக்கதுமான செயலாகும். இது தனிப்பட்ட பொய் என்பதைத் தாண்டி, ஒரு நாட்டின் மீது வீணான அவதூறைச் சுமத்தும் மாபெரும் சமூகத் துரோகமாகும். உண்மையாகவே அச்சுறுத்தல் இருந்தால் அவ்வாறு செல்வதில் நியாயம் உள்ளது; ஆனால் இல்லாததைக் கட்டிச்சொல்வது பாவம்.
எனினும், அவர் இவ்வாறு பொய் சொல்லி அந்த நாட்டுக்குச் சென்று, அங்கு அவர் செய்யும் தொழில் ஹலாலானதாக இருந்தால், அவரது அந்தச் சம்பாத்தியம் ஹராமாகிவிடாது. அதாவது, பிரயாணமும் விசா பெற்ற முறையும் தவறாக இருந்தாலும், அவர் நேர்மையான முறையில் உழைக்கும் சம்பாத்தியம் மார்க்க ரீதியாக ஹலாலானதுதான். ஆனால் இத்தகைய பொய்யான அவதூறுகளைச் சொல்லி நாட்டை விட்டுச் செல்வது மிகப்பெரிய பாவமாகும் என்பதை அவர் உணர்ந்து திருந்த வேண்டும்.