இதில் இரண்டு முக்கிய மார்க்கச் சட்டங்கள் உள்ளன:
1. இகாமத் சொல்லப்பட்ட பின் சுன்னத் தொழுதல்:
ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டுவிட்டால், கடமையான தொழுகையைத் தவிர வேறு எந்தத் தொழுகையும் இல்லை. அந்த நேரத்தில் ஒருவர் சுன்னத் தொழுகையை ஆரம்பிக்கவும் கூடாது, தொழுது கொண்டிருப்பவர் அதனைத் தொடரவும் கூடாது. இமாம் தக்பீர் கட்டுவதற்கு முன் அந்தத் தொழுகையை ஸலாம் கொடுத்து முடித்துவிட்டு (அல்லது முறித்துவிட்டு) ஜமாஅத்தோடு சேர வேண்டும். எனவே, அப்படித் தொழுபவர் சுன்னாவுக்கு மாற்றமாகச் செயல்படுகிறார்.
2. குறுக்கறுத்துச் செல்லுதல்:
அவர் சுன்னத் தொழுது கொண்டிருந்தாலும், அவரை நாம் குறுக்கறுத்துச் (Cross செய்து) செல்லக் கூடாது. ஏனெனில், தொழுகையாளியை குறுக்கறுத்துச் செல்பவனை "ஷைத்தான்" என்று ரசூல் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். அது சிலவேளை அவரது தொழுகையைப் பாத்திலாக்கவும் கூடும்.
எனவே, நாம் குறுக்கறுத்துச் செல்லாமல், முடிந்தால் வேறு வழியால் சென்று அந்த ஸஃப்பை நிரப்ப வேண்டும். வேறு வழி இல்லையென்றால், அவர் தொழுது முடிக்கும் வரை காத்திருந்து, பின் அந்த ஸஃப்பில் இணைந்து கொள்ள வேண்டும்.