ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைக்க முடியுமா?

கணவன் மனைவி பெயர் சொல்லி அழைத்தல் குடும்ப வாழ்க்கை சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைக்க முடியுமா?
பதில்
பதில்:

கணவனை மனைவி பெயர் சொல்லி அழைப்பதிலோ, அல்லது மனைவியைக் கணவன் பெயர் சொல்லி அழைப்பதிலோ மார்க்க ரீதியாக (ஷரியா அடிப்படையில்) எந்தச் சிக்கலும் தடையுமில்லை. அது முற்றிலும் அனுமதிக்கப்பட்டதே.

ஆனால், கணவன் பெயர் சொல்லி அழைப்பதைத் தவறாகவோ அல்லது அகௌரவமாகவோ நினைத்தால், "மார்க்கம் அனுமதித்திருக்கிறதே" என்று கூறி அவரை அகௌரவப்படுத்தி அழைக்கக் கூடாது. கணவன் தனது பெயரைச் சொல்லி அழைப்பதை விரும்பவில்லை என்றால், அதைத் தவிர்த்து விடுவதுதான் மார்க்கத்தில் சிறந்தது. அவர் அதைத் தவறாக நினைக்கவில்லை, விரும்புகிறார் என்றால் தாராளமாகப் பெயர் சொல்லி அழைக்கலாம்.

கணவனைப் பெயர் சொல்லி அழைப்பது ஒரு சுன்னத்தோ, அல்லது அப்படி அழைத்தால் பெரிய நன்மை கிடைக்கும் என்பதோ மார்க்கத்தில் இல்லை. எனவே, சமூக வழக்கையும் கணவரின் மன விருப்பத்தையும் பொறுத்து இந்த அழைப்பு முறையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

← முந்தையஅடுதது →