ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

உலகத்தில் உள்ள தனது மனைவி சொர்க்கத்தில் தனக்கு கிடைக்காமல் இருக்க வேண்டும் (ஹூருல் ஈன்கள் மட்டும் வேண்டும்) என்று ஒரு கண

சொர்க்கம் கணவன் மனைவி ஹூருல் ஈன் உலகத்துப் பெண்கள்

← முந்தையஅடுதது →
கேள்வி
உலகத்தில் உள்ள தனது மனைவி சொர்க்கத்தில் தனக்கு கிடைக்காமல் இருக்க வேண்டும் (ஹூருல் ஈன்கள் மட்டும் வேண்டும்) என்று ஒரு கணவன் விரும்பலாமா? சொர்க்கத்தில் உள்ள ஹூருல் ஈன்களை விட உலகத்துப் பெண்கள் சிறந்தவர்களா?
பதில்
பதில்:

ஒரு குடும்பமாக வாழக்கூடியவர்கள் நாளை மறுமையில் சொர்க்கம் செல்வதில் பூரணமான சந்தோஷமே குடும்பமாகப் போவதில் மட்டும்தான் இருக்கிறது. நாம் எந்த மனைவி, எந்தப் பிள்ளைகளுக்காகக் கஷ்டப்பட்டு வாழ்ந்தோமோ, அவர்களில் ஒருவர் நரகம் போவதை நினைத்தால் ஒரு முஃமினால் ஒருபோதும் சகிக்க முடியாது. "உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரக நெருப்பை விட்டுப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்" என்று குர்ஆன் கூறுகிறது. உலகத்துச் சச்சரவுகளுக்காக மறுமையில் மனைவி வரக்கூடாது என்று நினைப்பது மிகப்பெரிய தவறாகும்.

ஹூருல் ஈன்களை விடச் சிறந்தவர்கள் இந்த உலகத்துப் பெண்கள் தான்! ஹூருல் ஈன்கள் அல்லாஹ்வால் பிரத்தியேகமாகப் படைக்கப்பட்டுச் சொர்க்கத்தில் வைக்கப்பட்டவர்கள். ஆனால், உலகத்துப் பெண்கள் அமல் செய்து, அல்லாஹ்வுக்காகப் பொறுத்து, கஷ்டப்பட்டு, பிள்ளைகளை வளர்த்து, ஈமானுடைய முயற்சியால் சொர்க்கம் செல்பவர்கள். ஈமானோடு முயற்சி செய்து சொர்க்கம் செல்பவர்கள்தான் உயர்ந்தவர்களே தவிர, அங்கிருக்கும் ஹூருல் ஈன்கள் அல்ல. எனவே அல்லாஹ் உலகத்துப் பெண்களுக்கு மிகப் பெரிய தர்ஜாக்களை (அந்தஸ்துகளை) ஏற்படுத்துகிறான். ஆயிஷா (ரழி), கதீஜா (ரழி), மர்யம் (அலை) போன்ற உலகத்துப் பெண்கள்தான் ஹூருல் ஈன்களை விடச் சிறந்தவர்கள்.

எனவே ஒவ்வொரு மனிதனும் தனது மனைவியும் குழந்தைகளும் தங்களோடு சொர்க்கத்திற்கு வர வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். ஒரு கணவனோடு வாழும் பெண் இன்னொரு ஆணைப் பற்றிக் கற்பனை பண்ணக்கூடாது. ஆண்களுக்கும் அதே கணவன்மார்கள் தான் சொர்க்கத்தில் கிடைப்பார்கள். எந்தவொரு நல்ல பெண்ணும் பல கணவன்களை சொர்க்கத்தில் விரும்ப மாட்டாள்; தன் கணவனே தனக்கு கிடைக்க வேண்டும் என்றுதான் எண்ணுவாள்.

← முந்தையஅடுதது →