ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

குடும்பப் பிரச்சினைகளுக்கான தீர்வுக்காக கணவனின் குறைகளை மற்றவர்களிடம் சொல்ல முடியுமா?

கணவன் மனைவி குறைகளைச் சொல்லுதல் காதி சபை திருமணம்

← முந்தையஅடுதது →
கேள்வி
குடும்பப் பிரச்சினைகளுக்கான தீர்வுக்காக கணவனின் குறைகளை மற்றவர்களிடம் சொல்ல முடியுமா?
பதில்
பதில்:

குடும்பப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு காண வேண்டும், அல்லது சட்டப்பூர்வமான ஒரு தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இஸ்லாமிய அடிப்படையில் அமைக்கப்பட்ட காதி சபை, ஷரீஅத் சபை அல்லது பொறுப்பான பள்ளி நிர்வாகம் போன்ற இடங்களுக்குச் சென்று நீங்கள் தாராளமாக உங்கள் கணவரின் குறைகளைத் தெளிவாகக் கூறி முறைப்பாடு (வழக்கு) செய்யலாம். ஒரு வழக்கைப் பொறுத்தவரை கணவன் அல்லது மனைவியின் தவறுகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுவது அவசியமாகும். ரசூல் (ஸல்) அவர்களிடமும் கணவன்-மனைவியர் தங்கள் குறைகளை இவ்வாறு முறைப்பாடு செய்திருக்கிறார்கள்.

ஆனால், நீங்கள் வெறும் மார்க்கச் சட்டத்தை (ஃபத்வாவை) மாத்திரம் கேட்க விரும்பினால், கணவரின் பெயரையோ, அடையாளத்தையோ சொல்ல வேண்டிய அவசியமில்லை. "ஒரு குடும்பத்தில் இப்படி நடக்கிறது, இதற்கு மார்க்கத் தீர்வு என்ன?" என்று பொதுவாகக் கேட்டாலே போதுமானது. எனவே, அதிகாரப்பூர்வமாக முடிவு காண வேண்டிய இடத்தில் தெளிவாக முறைப்பாடு செய்யலாம்; வெறுமனே சட்டம் அறிய விரும்பும் இடத்தில் பொதுப்படையாகக் கேட்பதே சிறந்ததாகும்.

← முந்தையஅடுதது →