ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

நண்பர்கள் அனைவரும் (ஒரு வகுப்பிற்காகவோ அல்லது நிகழ்ச்சிக்காகவோ ஒன்று கூடியவர்கள்) ஒரு தினத்தை எடுத்து Party என்ற பெயரில்

Party விருந்து நண்பர்கள் வீண்விரயம்

← முந்தையஅடுதது →
கேள்வி
நண்பர்கள் அனைவரும் (ஒரு வகுப்பிற்காகவோ அல்லது நிகழ்ச்சிக்காகவோ ஒன்று கூடியவர்கள்) ஒரு தினத்தை எடுத்து Party என்ற பெயரில் ஹோட்டலில் ஒன்றுகூடி கொண்டாடுவது மார்க்க ரீதியாக தடையா? இது இஸ்ராஃப் (வீண்விரயம்) ஆகுமா?
பதில்
பதில்:

நண்பர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக ஒரு பார்ட்டி (Party) வைப்பது அடிப்படையில் கூடும். அதற்கு பல மார்க்க அடிப்படைகள் சான்றாக உள்ளன. ஆனால், அது எவ்வாறு செய்யப்படுகிறது என்ற அடிப்படையில்தான் அது இஸ்ராஃபா (வீண்விரயமா) இல்லையா என்று முடிவெடுக்க வேண்டும்.

வெறுமனே பணத்தை கலெக்ட் பண்ணுவது என்பது இஸ்ராஃபாக அமையாது. ஆனால், அந்தப் பணத்தின் மூலம் ஆடம்பரத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு மிக விலையுயர்ந்த ஹோட்டலை (Rich Hall) எடுத்தால், அது தவறாகும். மாறாக, ரம்மியமாக, ரசனையாக, ஒரு அழகிய இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு இடத்தை செலக்ட் பண்ணி, கடன் வாங்காமல் தங்கள் வசதியிலிருந்து பணத்தை கொடுத்து செய்தால் அது மார்க்கத்தில் தவறு இல்லை.

அதில் பாடல், ஆடல், சினிமா, வீண்விரயம் மற்றும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் எதுவும் இல்லை, நல்ல விஷயத்துக்காக மட்டும் ஒன்றுகூடுகிறார்கள் என்றால், இது மார்க்க ரீதியாக இஸ்ராஃப் என்ற பகுதியில் வராது. இதை இஸ்ராஃப் என்று சொல்வோமானால் வாழ்க்கையில் பல விஷயங்கள் இஸ்ராஃப் என்ற பட்டியலுக்குள் வந்துவிடும். ஆடம்பரத்தைக் காட்டி பெருமையடிப்பதற்காக மக்களிடம் பணம் வசூலித்து செய்தால் மட்டுமே அது இஸ்ராஃப் ஆகும்.

← முந்தையஅடுதது →