சுபஹ் குனூத்: சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவது பித்அத் ஆகும். ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் தொடர்ந்து ஐவேளை தொழுகையிலும் குனூத் நாஸிலா ஓதியதை வைத்து சுபஹ் தொழுகைக்கு சிலர் ஆதாரம் காட்டுகின்றனர். இது முற்றிலும் தவறான எடுகோளாகும்.
குனூத் நாஸிலா: இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரு பேரிடரோ அல்லது பாரிய சச்சரவுகளோ ஏற்படும்போது ஐவேளை தொழுகைகளில் குனூத் நாஸிலா ஓதலாம் என்பது பெருவாரியான இஸ்லாமிய அறிஞர்களின் நிலைப்பாடாகும். "அதிகாரத்தில் உங்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை" என்று குர்ஆன் வசனம் இறங்கிய பிறகு ரசூல் (ஸல்) அவர்கள் குனூத்தை விட்டார்கள். இது அந்த குறிப்பிட்ட நிகழ்வுக்கு மட்டும் வந்த தடையா, அல்லது இனி குனூத் நாஸிலா ஓதவே கூடாதா என்பதில் அறிஞர்களிடையே கருத்து முரண்பாடு உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு சமூகத்திற்காகவோ ஒருவருக்காகவோ துஆக் கேட்பதற்குத் தடையில்லை.
வித்ரு குனூத்: வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது சம்பந்தமாக உபை இப்னு கஅப் (ரழி), ஹஸன் (ரழி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள் பலவீனமானவை (ழயீஃப்) என ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். இமாம் புகாரி, முஸ்லிம் போன்றோரும் வித்ரு குனூத் பற்றி எவ்வித ஹதீஸையும் பதிவு செய்யவில்லை. இதனால் இமாம் மாலிக், இமாம் ஷாஃபி போன்றோர் வித்ரில் குனூத் ஓதாதவர்களாக இருந்துள்ளனர். எனவே வித்ரு தொழுகையில் ருகூவிற்குப் போவதற்கு முன் அல்லது பின் குனூத் ஓதாமல் இருப்பதே மிகச் சரியான நிலைப்பாடாகும். ஆயினும் சில அறிஞர்கள் அந்த ஹதீஸ்களை ஹஸன் எனத் தரப்படுத்தி வித்ரு குனூத்தை ஓதலாம் எனக் கூறுவதால், அது ஒரு இஜ்திஹாத் ரீதியான கருத்து முரண்பாடுள்ள விஷயமாகும். ஆனால், தற்போது பல இடங்களில் ஓதப்படுவது போன்று 15–20 நிமிடங்கள் சத்தமிட்டு, அழுது நீண்ட குனூத் ஓதுவதை எந்தவொரு இஸ்லாமிய அறிஞரும் அங்கீகரிக்கவில்லை.