தங்கும் வீட்டிற்கோ, இரண்டாவது அல்லது மூன்றாவதாக உள்ள வீட்டிற்கோ, விற்பனைக்காக (வியாபாரப் பொருளாக) வைக்கப்படாத சும்மா வாங்கிப் போட்டிருக்கும் நிலங்களுக்கோ, உபரியாக உள்ள வாகனங்களுக்கோ மார்க்கத்தில் ஸகாத் கிடையாது.
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய சட்டம்: ஒரு நிலத்தை வாங்குவதற்கு முன்பாக அந்தப் பணம் ஒரு வருட காலம் அவர் கையில் இருந்து, அதற்கு அவர் ஸகாத் கொடுக்காமல் அந்த நிலத்தை வாங்கியிருந்தால், அந்தப் பணத்திற்கான ஸகாத்தை அவர் நிலம் வாங்கிய பின்னராவது கொடுத்துவிட வேண்டும் (உதாரணமாக 10 லட்சத்திற்கு வாங்கிய நிலம் என்றால் 25,000 ஸகாத் கொடுக்க வேண்டும்).
மாறாக, கஷ்டப்பட்டுச் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில் வாங்கிய நிலத்திற்கு ஸகாத் இல்லை. வியாபார நோக்கத்திற்காக, ரியல் எஸ்டேட் போன்று லாபத்திற்காக நிலம் வாங்கி விற்கப்பட்டால் மட்டுமே அதற்கு ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்க வேண்டும்.