ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ஸகாத் பணத்தை மார்க்கம் சார்ந்த நிர்வாக நிதிகளுக்கோ அல்லது மார்க்க நிறுவனங்களுக்கோ கொடுக்கலாமா?

ஸகாத் மார்க்க நிறுவனங்கள் தஃவா எட்டு கூட்டத்தார்

← முந்தையஅடுதது →
கேள்வி
ஸகாத் பணத்தை மார்க்கம் சார்ந்த நிர்வாக நிதிகளுக்கோ அல்லது மார்க்க நிறுவனங்களுக்கோ கொடுக்கலாமா?
பதில்
பதில்:

ஸகாத் பணத்தைப் பொறுத்தவரைக்கும், அல்லாஹுத்தஆலா குர்ஆனிலே (அத்தவ்பா: 60) எட்டு கூட்டத்தாரைத் தெளிவாகச் சொல்லிக் காட்டுகிறான். அந்த எட்டு கூட்டத்தாரைத் தவிர வேறு எவருக்கும், எந்த நிறுவனத்திற்கும் நாம் ஸகாத் பணத்தைக் கொடுக்கக் கூடாது.

அது மார்க்கம் சார்ந்த தஃவா பிரச்சாரமாக இருந்தாலும் சரி, மார்க்க நிர்வாகம் சார்ந்த காரியங்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு ஸகாத் வழங்க முடியாது. ஏழைகள் (வருமானம் போதாதவர்கள்), கடன்பட்டவர்கள், வழிப்போக்கர்கள் போன்ற குர்ஆனில் குறிப்பிடப்பட்ட நபர்களுக்குத்தான் ஸகாத் போய்ச் சேர வேண்டும். குர்ஆனில் வரும் 'ஃபீ ஸபீலில்லாஹ்' (அல்லாஹ்வின் பாதையில்) என்பது அறப்போர் (ஜிஹாத்) செய்பவர்களை மட்டுமே குறிக்குமே தவிர, ஏனைய எந்த பொது அல்லது மார்க்க நிறுவனங்களுக்கும் அதிலிருந்து ஸகாத் கொடுக்கக் கூடாது.

← முந்தையஅடுதது →