← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #186
74- بَابُ تَرْكِ الْوُضُوءِ مِنْ مَسِّ الْمَيْتَةِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ، عَنْ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِالسُّوقِ دَاخِلًا مِنْ بَعْضِ الْعَالِيَةِ، وَالنَّاسُ كَنَفَتَيْهِ، فَمَرَّ بِجَدْيٍ أَسَكَّ مَيِّتٍ، فَتَنَاوَلَهُ فَأَخَذَ بِأُذُنِهِ، ثُمَّ قَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنَّ هَذَا لَهُ» وَسَاقَ الْحَدِيثَ AbuDawood-JawamiulKalim-.
இறந்தவற்றை தொட்டால் உளூ நீங்குமா ? தன் இரு பக்கங்களிலும் மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீ னாவின் மேட்டுப்பகுதியிலிருந்து கடைத் தெருவிற்குள் நுழைந்தார்கள். செத்த, இரு காதுகளும், இணைந்திருக்கும் ஒரு ஆட்டுக் குட்டிக்கருகில் சென்ற போது அதை அதன் காதை பிடித்து தூக்கி பிறகு, இதை உங்களில் யார் விரும்புவார் என வினவினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).