حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى الْبُرُلُّسِيُّ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنِ ابْنِ الْهَادِ، أَنَّ نَافِعًا حَدَّثَهُ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: «أَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الغَائِطِ فَلَقِيَهُ رَجُلٌ عِنْدَ بِئْرِ جَمَلٍ فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَقْبَلَ عَلَى الْحَائِطِ فَوَضَعَ يَدَهُ عَلَى الْحَائِطِ، ثُمَّ مَسَحَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ رَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الرَّجُلِ السَّلَامَ»
Abu-Dawood-Tamil-. Abu-Dawood-TamilMisc-. Abu-Abu-Dawood-Alamiah-. Abu-Dawood-JawamiulKalim-.
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்று விட்டு (திரும்பி) வரும் போது பிஃர் ஜமல் என்ற இடத்திற்கு அருகில் அவர்களை ஒருவர் சந்தித்தார். உடனே அவர் அவர்களுக்கு சலாம் சொன்னதும், அவருக்கு அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் உடன் பதிலளிக்காது ஒரு சுவருக்கு அருகில் வந்து தனது கையை சுவரில் வைத்தார்கள். பிறகு தனது முகத்தையும், தனது இரு கைகளையும் தடவினார்கள். பிறகு அம்மனிதருக்கு பதில் சலாம் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) அவர்கள். (குறிப்பு: இந்த ஹதீஸை முன்திரி அவர்கள் ஹசன் என்று கூறுகின்றார்.).