← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4604
  பாடம்:
بَابٌ فِي لُزُومِ السُّنَّةِ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ نَجْدَةَ، حَدَّثَنَا أَبُو عَمْرِو بْنُ كَثِيرِ بْنِ دِينَارٍ، عَنْ حَرِيزِ بْنِ عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَوْفٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «أَلَا إِنِّي أُوتِيتُ الْكِتَابَ، وَمِثْلَهُ مَعَهُ أَلَا يُوشِكُ رَجُلٌ شَبْعَانُ عَلَى أَرِيكَتِهِ يَقُولُ عَلَيْكُمْ بِهَذَا الْقُرْآنِ فَمَا وَجَدْتُمْ فِيهِ مِنْ حَلَالٍ فَأَحِلُّوهُ، وَمَا وَجَدْتُمْ فِيهِ مِنْ حَرَامٍ فَحَرِّمُوهُ، أَلَا لَا يَحِلُّ لَكُمْ لَحْمُ الْحِمَارِ الْأَهْلِيِّ، وَلَا كُلُّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ، وَلَا لُقَطَةُ مُعَاهِدٍ، إِلَّا أَنْ يَسْتَغْنِيَ عَنْهَا صَاحِبُهَا، وَمَنْ نَزَلَ بِقَوْمٍ فَعَلَيْهِمْ أَنْ يَقْرُوهُ فَإِنْ لَمْ يَقْرُوهُ فَلَهُ أَنْ يُعْقِبَهُمْ بِمِثْلِ قِرَاهُ» Abu-Abu-Abu-Abu-Abu-
(ஸுன்னா எனும்) நபிவழியைப் பின்பற்றுதல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! எனக்கு வேதமும் (குர்ஆனும்), அதனுடன் அதைப் போன்ற இன்னொன்றும் (ஹிக்மத் எனும் ஸுன்னாவும்) வழங்கப்பட்டுள்ளன. அறிந்து கொள்ளுங்கள்! சொகுசு இருக்கையில் அமர்ந்திருக்கும் வயிறு நிரம்பிய ஒரு மனிதன், ‘நீங்கள் இந்த குர்ஆனை மட்டுமே பற்றிக்கொள்ளுங்கள்; அதில் எதை ஹலால் (அனுமதிக்கப்பட்டது) எனக் காண்கிறீர்களோ அதை ஹலாலாகக் கருதுங்கள், எதை ஹராம் (விலக்கப்பட்டது) எனக் காண்கிறீர்களோ அதை ஹராமாய்க் கருதுங்கள் (ஸுன்னா தேவையில்லை)’ என்று கூறும் காலம் விரைவில் வரும். அறிந்து கொள்ளுங்கள்! நாட்டுக்கழுதையின் இறைச்சியும், வேட்டையாடும் வனவிலங்குகளில் கோரைப் பற்கள் உடையவைகளும், (இஸ்லாமிய ஆட்சியில் ஒப்பந்தத்தோடு வாழும்) பிறமதக் குடிமகனின், விழுந்து கிடந்து கண்டெடுக்கப்பட்ட பொருளும் உங்களுக்கு ஆகுமானதல்ல; அதன் உரிமையாளர் அது தேவை இல்லை என்று விட்டுவிட்டாலே தவிர!” மேலும், எவரேனும் ஒரு கூட்டத்தாரிடம் விருந்தினராகச் சென்றால், அவரை உபசரிப்பது அக்கூட்டத்தின் மீது கடமையாகும். அவர்கள் அவரை உபசரிக்காவிட்டால், தன் விருந்துபசாரத்திற்கு நிகரான அளவை அவர்களிடம் பெற்றுக் கொள்ளும் உரிமை அவருக்கு உண்டு.
அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)