← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4972
  பாடம்:
بَابٌ فِي قَوْلِ الرَّجُلِ: زَعَمُوا حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي قِلَابَةَ، قَالَ: قَالَ أَبُو مَسْعُودٍ لِأَبِي عَبْدِ اللَّهِ أَوْ قَالَ: أَبُو عَبْدِ اللَّهِ لِأَبِي مَسْعُودٍ مَا سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: فِي «زَعَمُوا؟» قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «بِئْسَ مَطِيَّةُ الرَّجُلِ زَعَمُوا» قَالَ أَبُو دَاوُدَ: ” أَبُو عَبْدِ اللَّهِ هَذَا: حُذَيْفَةُ “ Abu-Abu-Abu-Abu-Abu-
ஒருவர், மக்கள் பேசிக் கொள்கின்றனர் என்ற வார்த்தையை கூறுவது பற்றி வந்துள்ளவை. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஸஅமூ – மக்கள் பேசிக் கொள்கின்றனர் என்ற வார்த்தை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் என்பதை நீங்கள் செவியேற்றதுண்டா? என அபூமஸ்வூத் அவர்கள், அபூஅப்தில்லாஹ் அவர்களிடம்; அல்லது அபூஅப்தில்லாஹ் அவர்கள், அபூமஸ்வூத் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர்கள், ஸஅமூ – மக்கள் பேசிக் கொள்கின்றனர் என்ற உறுதியற்ற வார்த்தை(யை ஒருவர் கூறுவது அவரது) தீய சவாரியாகும் (நடைமுறையாகும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று பதில் கூறினார்கள். அபூதாவூத் இமாம் கூறுகிறார்: இதில், அபூஅப்தில்லாஹ் என்ற குறிப்புப் பெயர் கொண்டவர் ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் ஆவார்கள்.