← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #96
45- بَابُ الْإِسْرَافِ فِي الْمَاءِ حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَعَامَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ، سَمِعَ ابْنَهُ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْقَصْرَ الْأَبْيَضَ، عَنْ يَمِينِ الْجَنَّةِ إِذَا دَخَلْتُهَا، فَقَالَ: أَيْ بُنَيَّ، سَلِ اللَّهَ الْجَنَّةَ، وَتَعَوَّذْ بِهِ مِنَ النَّارِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ سَيَكُونُ فِي هَذِهِ الْأُمَّةِ قَوْمٌ يَعْتَدُونَ فِي الطَّهُورِ وَالدُّعَاءِ» AbuDawood-JawamiulKalim-.
தண்ணீரை விரயமாக்குதல். யா அல்லாஹ்! நான் சுவனத்தில் நுழைந்ததும் அதன் வலப்பக்கத்தில் எனக்கு ஒரு ‎வெள்ளைமாளிகையை அருள்வாயாக என உன்னிடம் வேண்டுகிறேன் என்று தனது ‎மகன் பிரார்த்தனை செய்வதை செயியுற்ற அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலி) ‎அவர்கள் தமது மகனை நோக்கி, என்னருமை மகனே! நீ அல்லாஹ்வின் சுவனத்தை ‎கேள். (பிரார்த்தனையில் வரம்பு மீறாதே) ஏனெனில் சுத்தம் செய்வதிலும் ‎பிரார்த்தனை புரிவதிலும் வரம்பு மீறும் ஒரு கூட்டம் எனது இந்த சமுதாயத்தில் இனி ‎உருவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் என அறிவுரை ‎வழங்கினார்கள்.‎ ‎(குறிப்பு: இது அஹ்மது, இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது. அப்துல்லாஹ் இப்னு ‎முகப்பல் அவர்களின் மகன் என்பவர் யார் என தெரியாதவர்.)‎