← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1008
அத்தியாயம்: 15  பாடம்: 3
بَابُ سُؤَالِ النَّاسِ الإِمَامَ الِاسْتِسْقَاءَ إِذَا قَحَطُوا حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَتَمَثَّلُ بِشِعْرِ أَبِي طَالِبٍ: «وَأَبْيَضَ يُسْتَسْقَى الغَمَامُ بِوَجْهِهِ … ثِمَالُ اليَتَامَى عِصْمَةٌ لِلْأَرَامِلِ»
பஞ்சம் நிலவும் போது மழைவேண்டிப் பிரார்த்திக்கும்படி மக்கள் இமாமிடம் கோருவது. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “இவர் வெண்ணிறம் கொண்டவர்; இவர் முகம்தனை முன்வைத்தே; முகில்மழை கேட்கப்படும்; அநாதைகளின் புகலிடம்; விதைவைகளின் காவலர்” என்று அபூதாலிப் அவர்கள் பாடிய கவிதையை இப்னு உமர் (ரலி) அவர்கள் (சிலநேரம்) எடுத்தாள்வதை நான் செவியேற்றுள்ளேன்.