← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1631
قَالَ عَبْدُ العَزِيزِ وَرَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ يُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ العَصْرِ، – وَيُخْبِرُ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حَدَّثَتْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَدْخُلْ بَيْتَهَا إِلَّا صَلَّاهُمَا»
அப்துல் அஸிஸ் அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள், அஸருக்குப் பின்பும் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ‘நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் நுழையும்போதெல்லாம் இந்த இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை’ என ஆயிஷா(ரலி) கூறினார் என்றும் அறிவித்தார். Book :25