அத்தியாயம்: 50 பாடம்: 9
بَابُ مَا لاَ يُرَدُّ مِنَ الهَدِيَّةِ
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ الأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ
دَخَلْتُ عَلَيْهِ فَنَاوَلَنِي طِيبًا، قَالَ: «كَانَ أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ لاَ يَرُدُّ الطِّيبَ»
قَالَ:
وَزَعَمَ أَنَسٌ:
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ»
நிராகரிக்கக் கூடாத அன்பளிப்பு. அஸ்ரா பின் ஸாபித் அல்அன்ஸாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸுமாமா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் எனக்கு வாசனைத் திரவியத்தைக் கொடுத்து, அனஸ் (ரலி) அவர்களுக்கு, வாசனைத் திரவியத்தை எவராவது அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை அவர்கள் ஏற்க மறுப்பதில்லை என்றும் கூறினார். மேலும் ஸுமாமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் வாசனைத் திரவியத்தை ஏற்க மறுப்பதில்லை” என்று அனஸ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.