அத்தியாயம்: 56 பாடம்: 132
بَابُ التَّسْبِيحِ إِذَا هَبَطَ وَادِيًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
«كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا، وَإِذَا نَزَلْنَا سَبَّحْنَا»
பள்ளத்தாக்கில் இறங்கும் போது சுப்ஹானல்லாஹ் என்று சொல்வது. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (மேட்டில்) ஏறும்போது ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று தக்பீர் கூறி வந்தோம்; (பள்ளத்தாக்குகளில்) இறங்கும்போது ‘சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் குறைகளிலிருந்தும் பலவீனங்களிலிருந்தும் தூய்மையானவன்’ என்று தஸ்பீஹ் செய்து வந்தோம்.