← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3602
وَعَنْ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الحَارِثِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُطِيعِ بْنِ الأَسْوَدِ، عَنْ نَوْفَلِ بْنِ مُعَاوِيَةَ، مِثْلَ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ، هَذَا إِلَّا أَنَّ أَبَا بَكْرٍ يَزِيدُ «مِنَ الصَّلاَةِ صَلاَةٌ مَنْ فَاتَتْهُ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ»
இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அறிவித்தார். அபூ ஹுரைரா (ரலி) அறிவித்த (மேற்கண்ட) இந்த நபிமொழியைப் போன்று நவ்ஃபல் இப்னு முஆவியா (ரலி) அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான் இப்னு முதீஉ இப்னி அஸ்வத் (ரஹ்) அவர்களும், அவர்களிடமிருந்து அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி ஹாரிஸ் (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள். எனினும், இந்த அறிவிப்பில் அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான் (ரஹ்), ‘தொழுகையில் ஒரு தொழுகை (அஸர்) உண்டு; ஒருவருக்கு அது தவறிவிடுமாயின் அது அவரின் மனைவி மக்களும் அவரின் செல்வமும் பறிக்கப்பட்டுவிட்டதைப் போன்றதாகும்’ என்னும் நபிவாசகத்தை அதிகப்படியாகக் கூறினார்கள். Book :61