அத்தியாயம்: 63
حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ:
«رَأَيْتُ فِي الجَاهِلِيَّةِ قِرْدَةً اجْتَمَعَ عَلَيْهَا قِرَدَةٌ، قَدْ زَنَتْ، فَرَجَمُوهَا، فَرَجَمْتُهَا مَعَهُمْ»
இதில் வரும் அறிவிப்பாளர் அம்ர் பின் மைமூன் அவர்கள், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தவர். ஆனால் நபி (ஸல்) அவர்களை பார்க்கவில்லை என்பதால் இவர் நபித்தோழர் அல்ல. நபித்தோழர்களுக்கு அடுத்து உள்ள தாபீஈன்களில் உள்ளவர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/307) எனவே இது முன்கதிஃயான அறிவிப்பாளர் தொடர் என்பதால் பலவீனமான தாகும். மேலும் இந்த செய்தியை பற்றி இப்னு அப்தில்பர் அவர்கள், விபச்சாரத்திற்கு தண்டனை தருவது என்பது விலங்குகளுக்கு இல்லை என்பதால் இது அறிஞர்களின் பார்வையில் மறுக்கப்படவேண்டிய செய்தியே என்று கூறியுள்ளார். (நூல்: அல்இஸ்தீஆப்-3/282). அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333 இறப்பு ஹிஜ்ரி 1420 வயது: 87 அவர்களும் இது மறுக்கப்படவேண்டிய செய்தி என்று கூறியுள்ளார். இமாம் குர்துபீ அவர்கள் ( புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 அவர்கள் இந்த செய்தியை அறியாமைக்கால நிகழ்வுகளில் தான் பதிவு செய்துள்ளார்.) அம்ர் பின் மைமூன் அறியாமைக்காலத்தில் உள்ளவர்; ஆனால் நபி (ஸல்) அவர்களை பார்க்கவில்லை என்பதை உணர்த்துவதற்கே இந்த செய்தியை பதிவு செய்துள்ளார் என்று கூறுகிறார். (நூல்: அல்ஜாமிஉ லிஅஹ்காமுல் குர்ஆன்-1/442 இப்னு தைமியா, இப்னு ஹஜர், பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) இப்னு குதைபா போன்றோர் விலங்குகளிடம் பல வகையான பழக்கவழக்கங்கள் உள்ளன. எனவே அவைகளிடம் இது போன்ற நிகழ்வு நடத்திருக்காது என்று உறுதியாக கூறமுடியாது. நடந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர். (சுருக்கம்) (நூல்கள்: தஃவீலுல் முக்தலஃபுல் ஹதீஸ்-255, 256, மஜ்மூஉல் ஃபதாவா-11/545, ஃபத்ஹுல் பாரீ-7/161) எனவே இந்த செய்தி ஒரு தகவல்தானே தவிர இதற்கும் மார்க்க சட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. Favorite