← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3921
حَدَّثَنَا أَصْبَغُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، تَزَوَّجَ امْرَأَةً مِنْ كَلْبٍ يُقَالُ لَهَا أُمُّ بَكْرٍ، فَلَمَّا هَاجَرَ أَبُو بَكْرٍ طَلَّقَهَا، فَتَزَوَّجَهَا ابْنُ عَمِّهَا، هَذَا الشَّاعِرُ الَّذِي قَالَ هَذِهِ القَصِيدَةَ رَثَى كُفَّارَ قُرَيْشٍ: [البحر الوافر] وَمَاذَا بِالقَلِيبِ قَلِيبِ بَدْرٍ … مِنَ الشِّيزَى تُزَيَّنُ بِالسَّنَامِ وَمَاذَا بِالقَلِيبِ قَلِيبِ بَدْرٍ … مِنَ القَيْنَاتِ وَالشَّرْبِ الكِرَامِ تُحَيِّينَا السَّلاَمَةَ أُمُّ بَكْرٍ … وَهَلْ لِي بَعْدَ قَوْمِي مِنْ سَلاَمِ يُحَدِّثُنَا الرَّسُولُ بِأَنْ سَنَحْيَا … وَكَيْفَ حَيَاةُ أَصْدَاءٍ وَهَامِ
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) ‘பனூகல்ப்’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். ‘உம்மு பக்ர்’ என்று அவருக்குச் சொல்லப்படும். அபூ பக்ர்(ரலி) (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்தபோது அப்பெண்ணை விவாக விலக்கு செய்து விடவே, அவரை அவரின் தந்தையின் சகோதரர் மகன் (மறு) மணம் புரிந்து கொண்டார். அவர்தான் (பத்ருப் போரில்) கொல்லப்பட்டு, பத்ர் பாழுங்கிணற்றில் போடப்பட்ட) குறைஷிக்குல இறை மறுப்பாளர்களுக்காக இந்த இரங்கல் பாவைப் பாடிய கவிஞராவார். பத்ரின் பாழுங்கிணற்றுக்கு (இப்போது) என்ன களங்கம் நேர்ந்துவிட்டது? ஒட்டகத் திமில்களால் அலங்கரிக்கப்பட்ட மரத்தட்டுகளால் (விருந்தளிக்கம் அதிபர்கள் தூக்கி வீசப்பட்டதால்…) பத்ரின் பாழுங்கிணற்றுக்கு என்ன (களங்கமா) நேர்ந்துவிட்டது? அழகிய பாடம்களால்… மதிப்புக்குரிய மதுபோதைப்பிரியர்களால்… (என் காதலி) உம்முபக்ர் எங்கள் மனச் சாந்திக்காக ஆறுதல் சொல்கிறாள். என் சமுதாயமே (சமாதிக்குப்) போன பின் எனக்கேது மனச்சாந்தி…? (மரணத்திற்குப் பின்) நாம் மீண்டும் உயிர்தெழுவோம் என்கிறார் இறைத்தூதர்! (ஆனால்,) ஆந்தைகளும் தேவாங்குகளும் உயிர் பிழைப்பது எப்படி…? Book :63