அத்தியாயம்: 64
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: سَمِعْتُ الزُّهْرِيَّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، يَقُولُ
أَذْكُرُ أَنِّي «خَرَجْتُ مَعَ الغِلْمَانِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ، نَتَلَقَّى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، وَقَالَ سُفْيَانُ مَرَّةً : «مَعَ الصِّبْيَانِ»
ஸாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (தபூக் போரிலிருந்து திரும்பி வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்பதற்காக ‘வதா’ மலைக் குன்றுக்கு சிறுவர்களுடன் சென்றதை நினைவு கூர்கிறேன். அறிவிப்பாளர் ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) கூறினார்: (‘ஃகில்மான்’ (சிறுவர்கள்) என்பதற்கு பதிலாக) ‘ஸிப்யான் (சிறுவர்கள்) என்று ஸாயிப் பின் யஸீத் (ரலி) மற்றொரு முறை (இதை அறிவிக்கும்போது) கூறினார்கள்.