← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4597
بَابُ {إِلَّا المُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالوِلْدَانِ لاَ يَسْتَطِيعُونَ حِيلَةً وَلاَ يَهْتَدُونَ سَبِيلًا} [النساء: 98] حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا {إِلَّا المُسْتَضْعَفِينَ} [النساء: 98] قَالَ: «كَانَتْ أُمِّي مِمَّنْ عَذَرَ اللَّهُ»
பாடம் : 20 ஆனால், எவ்வித உபாயத்தையும் மேற்கொள்ள முடியாமல், எந்த வழிவகையும் பெறாமல் உண்மையிலேயே இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர! (எனும் 4:98ஆவது வசனம்.) இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அறிவித்தார். ‘இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர!’ எனும் ( திருக்குர்ஆன் 4:98 வது) இறைவசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) பின் வருமாறு) கூறினார்கள்: இயலாதவர்கள் என அல்லாஹ் அறிவித்தவர்களில் என் தாயார் (உம்முல் ஃபள்ல்) அவர்களும் ஒருவராயிருந்தார். Book : 65