← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4855
அத்தியாயம்: 65  பாடம்: 53.
سُورَةُ وَالنَّجْمِ وَقَالَ مُجَاهِدٌ: {ذُو مِرَّةٍ} [النجم: 6]: «ذُو قُوَّةٍ»، {قَابَ قَوْسَيْنِ} [النجم: 9]: «حَيْثُ الوَتَرُ مِنَ القَوْسِ»، {ضِيزَى} [النجم: 22]: «عَوْجَاءُ»، {وَأَكْدَى} [النجم: 34]: «قَطَعَ عَطَاءَهُ»، {رَبُّ الشِّعْرَى} [النجم: 49]: «هُوَ مِرْزَمُ الجَوْزَاءِ»، {الَّذِي وَفَّى} [النجم: 37]: «وَفَّى مَا فُرِضَ عَلَيْهِ»، {أَزِفَتْ الآزِفَةُ} [النجم: 57]: «اقْتَرَبَتِ السَّاعَةُ»، {سَامِدُونَ} [النجم: 61]: «البَرْطَمَةُ» وَقَالَ عِكْرِمَةُ: «يَتَغَنَّوْنَ، بِالحِمْيَرِيَّةِ» وَقَالَ إِبْرَاهِيمُ: {أَفَتُمَارُونَهُ} [النجم: 12]: ” أَفَتُجَادِلُونَهُ، وَمَنْ قَرَأَ: (أَفَتَمْرُونَهُ): يَعْنِي أَفَتَجْحَدُونَهُ ” وَقَالَ: {مَا زَاغَ البَصَرُ} [النجم: 17]: «بَصَرُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، {وَمَا طَغَى} [النجم: 17]: «وَمَا جَاوَزَ مَا رَأَى»، {فَتَمَارَوْا} [القمر: 36]: «كَذَّبُوا» وَقَالَ الحَسَنُ: {إِذَا هَوَى} [النجم: 1]: «غَابَ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {أَغْنَى وَأَقْنَى} [النجم: 48]: «أَعْطَى فَأَرْضَ» حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، قَالَ قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: يَا أُمَّتَاهْ هَلْ رَأَى مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَبَّهُ؟ فَقَالَتْ: لَقَدْ قَفَّ شَعَرِي مِمَّا قُلْتَ، أَيْنَ أَنْتَ مِنْ ثَلاَثٍ، مَنْ حَدَّثَكَهُنَّ فَقَدْ كَذَبَ: مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَبَّهُ فَقَدْ كَذَبَ، ثُمَّ قَرَأَتْ: {لاَ تُدْرِكُهُ الأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الخَبِيرُ} [الأنعام: 103]، {وَمَا كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِنْ وَرَاءِ حِجَابٍ} [الشورى: 51]. وَمَنْ حَدَّثَكَ أَنَّهُ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَدْ كَذَبَ، ثُمَّ قَرَأَتْ: {وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا} [لقمان: 34]. وَمَنْ حَدَّثَكَ أَنَّهُ كَتَمَ فَقَدْ كَذَبَ، ثُمَّ قَرَأَتْ: {يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ} [المائدة: 67] الآيَةَ وَلَكِنَّهُ «رَأَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ فِي صُورَتِهِ مَرَّتَيْنِ»
‘அந்நஜ்ம்’ எனும் 53 ஆவது அத்தியாயம். (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்குர்ஆன்: 53:6 ) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃதூ மிர்ரா’ எனும் சொல்லுக்கு ‘வலிமை வாய்ந்தவர்’ என்பது பொருள். அல்குர்ஆன்: 53:9 ) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காப கவ்சைன்’ (வில்லின் இரு முனைகளுக்குச் சமமான அளவு) என்பது, வில்லில் நாண் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. அல்குர்ஆன்:53:22 ) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளீஸா’ எனும் சொல்லுக்கு ‘வளைந்தது’ என்பது பொருள். அல்குர்ஆன்: 53:34 ) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ அக்தா’ எனும் சொல்லுக்கு ‘மேலும் தான் கொடுப்பதை நிறுத்திக்கொண்டான்’ என்று பொருள். அல்குர்ஆன்: 53:49 ) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரப்புஷ் ஷிஅரா’ என்பதிலுள்ள ‘ஷிஅரா’ எனும் சொல், ‘மிர்ஸமுல் ஜவ்ஸாஉ’ எனும் நட்சத்திரத்தைக் குறிக்கும். அல்குர்ஆன்: 53:37 ) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்லஃதீ வஃப்பா’ (நிறைவேற்றிய அவர்) என்பது, ‘தம்மீது விதியாக்கப்பட்டிருந்த இறையாணைகளை நிறைவேற்றிய இப்ராஹீம் (அலை) அவர்களைக் குறிக்கும். அல்குர்ஆன்: 53:57 ) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸிஃபத்தில் ஆஸிஃபா’ (வரவேண்டிய நேரம் நெருங்கி வந்துவிட்டது) எனும் வாக்கியத்திற்கு ‘மறுமை நெருங்கிவிட்டது’ என்று பொருள். அல்குர்ஆன்: 53:61 ) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாமிதூன்’ எனும் சொல்லுக்கு ‘ஆடிப்பாடி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்’ என்று பொருள். ‘‘யமன் நாட்டுப் பாடல்களைப் பாடி ஆரவாரம் செய்தனர் என்பதையே இந்த வசனம் குறிப்பிடுகிறது” என இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்குர்ஆன்: 53:12 ) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அ ஃப துமாரூனஹு’ எனும் சொல்லுக்கு, ‘நீங்கள் அவருடன் தர்க்கம் செய்கிறீர்களா?’ என்று பொருள். (இதை) ‘அ ஃப தம்ரூனஹு’ என்று ஓதியவர்கள் ‘அவரை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்களா?’ என்று பொருள் கொள்கின்றனர். அல்குர்ஆன்: 53:17 ) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா ஸாஃகல் பஸர்’ (பார்வை விலகிவிடவுமில்லை) என்பதிலுள்ள பார்வை என்பது, முஹம்மத் (ஸல்) அவர்களின் பார்வையைக் குறிக்கும். ‘வமா தஃகா’ எனும் சொல்லுக்கு ‘‘அவரது பார்வை, தான் கண்டதைக் கடந்துவிடவுமில்லை” என்று பொருள். அடுத்த அத்தியாயமான ( அல்குர்ஆன்: 54:36 ) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபதமாரவ்’ எனும் சொல்லுக்கு, ‘அவர்கள் (எல்லா எச்சரிக்கைகளையும்) பொய்யனவை எனக் கருதினர்’ என்று பொருள். ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்குர்ஆன்: 53:1 ) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘இதா ஹவா’ எனும் சொல்லுக்கு ‘அது மறையும்போது’ என்று பொருள். அல்குர்ஆன்: 53:48 ) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அஃக்னா வ அக்னா’ எனும் வாக்கியத்திற்கு, ‘அவனே செல்வத்தை வழங்கித் தன்னிறைவு அடையச்செய்தான்’ என்று பொருள்.