← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4872
بَابُ {فَكَانُوا كَهَشِيمِ المُحْتَظِرِ، وَلَقَدْ يَسَّرْنَا القُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 32] حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ: ” {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15] ” الآيَةَ
பாடம் : 5 உடனே அவர்கள், மிதிபட்ட காய்ந்த வைக்கோல் போல் ஆகிவிட்டார்கள். (மக்கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே, நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:31,32 ஆகிய வசனங்கள்). அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் (54 வது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) நபி(ஸல்) அவர்கள் ‘ஃபஹல் மின்(ம்) முத்தம்ர்’ என்றே ஓதினார்கள். Book : 65