← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4896
அத்தியாயம்: 65  பாடம்: 1
سُورَةُ الصَّفِّ وَقَالَ مُجَاهِدٌ: {مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ} [آل عمران: 52] مَنْ يَتَّبِعُنِي إِلَى اللَّهِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {مَرْصُوصٌ} [الصف: 4]: «مُلْصَقٌ بَعْضُهُ بِبَعْضٍ» وَقَالَ يَحْيَى: «بِالرَّصَاصِ» بَابُ قَوْلِهِ تَعَالَى: {مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ} [الصف: 6] حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «إِنَّ لِي أَسْمَاءً، أَنَا مُحَمَّدٌ، وَأَنَا أَحْمَدُ، وَأَنَا المَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِيَ الكُفْرَ، وَأَنَا الحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا العَاقِبُ»
61 . அஸ்ஸஃப் (எனும் 61 வது அத்தியாயம்) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அல்குர்ஆன்: ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மன் அன்ஸாரீ இலல்லாஹ்’ (இறைவழியில் எனக்கு உதவி புரிபவர் யார்?) என்பதன் கருத்தாவது: இறைவழியில் என்னைப் பின்பற்றி நடப்பவர் யார்? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (அல்குர்ஆன்: ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மர்ஸூஸ்’ எனும் சொல்லுக்கு ‘ஒன்றோடொன்று (வலுவுடன்) இணைக்கப்பட்டது” என்பது பொருள். மற்றவர்கள் கூறுகிறார்கள்: ‘மர்ஸூஸ்’ என்பதற்கு ‘ஈயத்தால் வார்க்கப்பட்டது’ என்பது பொருள். எனக்குப் பிறகு அஹ்மத் எனும் பெயருடைய தூதர் ஒருவர் வருவார் (என ஈஸா அலை கூறினார்) எனும் (அல்குர்ஆன்: ஆவது வசனத் தொடர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்குப் பல பெயர்கள் உண்டு. 1 . நான் ‘முஹம்மது’ (புகழப்பட்டவர்) ஆவேன். 2 . இன்னும் நான் ‘அஹ்மத்’ (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன். 3 . நான் ‘மாஹீ’ (அழிப்பவர்) ஆவேன். அல்லாஹ் என் மூலம் இறைமறுப்பை அழிப்பான். 4 . நான் ‘ஹாஷிர்’ (ஒருங்கிணைப்பவர்) ஆவேன். என் தலைமையின் கீழ் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள். 5 . நான் ‘ஆகிப்’ (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன். ஜுபைர் பின் முத்இம்