← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4973
بَابُ قَوْلِهِ: {سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ} [المسد: 3] حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ أَبُو لَهَبٍ: تَبًّا لَكَ، أَلِهَذَا جَمَعْتَنَا؟ ” فَنَزَلَتْ: {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ} [المسد: 1] إِلَى آخِرِهَا
பாடம் : 3 அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் நுழைவான் எனும் (111:3ஆவது) இறைவசனம். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார் ‘உமக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகவா எங்களை நீ ஒன்று கூட்டினாய்!’ என்று (நபி (ஸல்) அவர்களைப் பார்த்து) அபூ லஹப் கேட்டான். அப்போது ‘அழியட்டும், அபூ லஹபின் இரண்டு கரங்கள்..’ எனும் (111 வது இறைவசனம்) அருளப்பெற்றது. Book : 65