← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #605 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10  பாடம்: 2
بَابٌ: الأَذَانُ مَثْنَى مَثْنَى حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سِمَاكِ بْنِ عَطِيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ «أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ، إِلَّا الإِقَامَةَ»
பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை சொல்லவேண்டும். அனஸ் (ரலி) அறிவித்தார். பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் ‘கத் காமதிஸ் ஸலாஹ்’ என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.