← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #6299
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا عَبَّادُ بْنُ مُوسَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: سُئِلَ ابْنُ عَبَّاسٍ: مِثْلُ مَنْ أَنْتَ حِينَ قُبِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «أَنَا يَوْمَئِذٍ مَخْتُونٌ» قَالَ: وَكَانُوا لاَ يَخْتِنُونَ الرَّجُلَ حَتَّى يُدْرِكَ،
ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப்பட்டபோது தாங்கள் எவ்வாறிருந்தீர்கள்?’ என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நான் அப்போது விருத்தசேதனம் செய்தவனாயிருந்தேன்’ என்று பதிலளித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார். பருவ வயதை நெருங்கிய பிறகே (அன்றைய) மக்கள் விருத்தசேதனம் செய்வது வழக்கம்.