← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #643
بَابُ الكَلاَمِ إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ سَأَلْتُ ثَابِتًا البُنَانِيَّ – عَنِ الرَّجُلِ يَتَكَلَّمُ بَعْدَ مَا تُقَامُ الصَّلاَةُ – فَحَدَّثَنِي عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «أُقِيمَتِ الصَّلاَةُ فَعَرَضَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَحَبَسَهُ بَعْدَ مَا أُقِيمَتِ الصَّلاَةُ»
பாடம் : 28 தொழுகைக்கு இகாமத் சொன்ன பின் பேசுவது. ஹுமைத் அறிவித்தார். நான் தாபித் அல் புனானி இடம் தொழுகைக்கு இகாமத் சொன்ன பின்பேசக் கூடியவரைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ‘தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் ஒருவர் வந்து நபி(ஸல்) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதனால் அவர்கள் தொழுகைக்குத் தாமதமாக வந்தார்கள்’ என்று அனஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸைக் கூறினார். Book : 10