அத்தியாயம்: 13 பாடம்: 13
بَابُ الصَّلاَةِ إِلَى الحَرْبَةِ يَوْمَ العِيدِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ تُرْكَزُ الحَرْبَةُ قُدَّامَهُ يَوْمَ الفِطْرِ وَالنَّحْرِ، ثُمَّ يُصَلِّي»
பெரு நாள் தினத்தில் ஈட்டி(யைத் தடுப்பாக வைத்துக் கொண்டு அதை) நோக்கித் தொழுதல். இப்னு உமர் (ரலி) அறிவித்தார். நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி (ஸல்) அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள்.