← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2017
12 – بَابُ بَيَانِ أَنَّ الْقُبْلَةَ فِي الصَّوْمِ لَيْسَتْ مُحَرَّمَةً عَلَى مَنْ لَمْ تُحَرِّكْ شَهْوَتَهُ حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ إِحْدَى نِسَائِهِ، وَهُوَ صَائِمٌ» ثُمَّ تَضْحَكُ Tamil-2017 Shamila-1106 JawamiulKalim-1858
பாடம் : 12 பாலுணர்வைத் தூண்டாது எனில் நோன்பாளி (தம் மனைவியை) முத்தமிடுவது தடைசெய்யப்பட்டதன்று. (ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரியின் புதல்வர்) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் தம் துணைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்” எனக் கூறிவிட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் சிரிப்பார்கள். Book : 13