← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2169
وحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ، عَنْ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّهُ قَالَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجَاوِرُ، فِي رَمَضَانَ، الْعَشْرَ الَّتِي فِي وَسَطِ الشَّهْرِ، وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ، غَيْرَ أَنَّهُ قَالَ: «فَلْيَثْبُتْ فِي مُعْتَكَفِهِ» وَقَالَ: وَجَبِينُهُ مُمْتَلِئًا طِينًا وَمَاءً Tamil-2169 Shamila-1167 JawamiulKalim-2000
மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் நடுப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்” என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும் (“அதே இடத்திலேயே தங்கி (இஃதிகாஃப்) இருக்கட்டும்” என்பதைக் குறிக்க “ஃபல்யபித் ஃபீ முஅத கிஃபிஹி” என்பதற்குப் பகரமாக) “ஃபல்யஸ்புத் ஃபீ முஅதகிஃபிஹி” எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது. (அவர்களது முகத்தில் ஈரமான களிமண் என்பதற்குப் பதிலாக) “அவர்களது நெற்றியில் ஈரமான களிமண்” என்று காணப்படுகிறது. Book : 13