← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2561
وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَخْنَسِ، عَنْ أَنَسٍ، قَالَ: سَمِعْتُهُ يَقُولُ مُرَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَدَنَةٍ أَوْ هَدِيَّةٍ، فَقَالَ: «ارْكَبْهَا» قَالَ: إِنَّهَا بَدَنَةٌ أَوْ هَدِيَّةٌ، فَقَالَ: «وَإِنْ» – وحَدَّثَنَاه أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، حَدَّثَنِي بُكَيْرُ بْنُ الْأَخْنَسِ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، يَقُولُ: مُرَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَدَنَةٍ فَذَكَرَ مِثْلَهُ Tamil-2561 Shamila-1323 JawamiulKalim-2353
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களைக் கடந்து “ஒரு பலி ஒட்டகம்” அல்லது “ஒரு பலிப்பிராணி” கொண்டு செல்லப்பட்டது. அப்போது (அதை இழுத்துக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்த மனிதரிடம்) நபி (ஸல்) அவர்கள், “அதில் ஏறிச்செல்க” என்றார்கள். அவர், “இது “பலி ஒட்டகம்” அல்லது “பலிப்பிராணி” ஆயிற்றே?” என்றார். நபி (ஸல்) அவர்கள், “இருக்கட்டும் (அதில் ஏறிச் செல்க)”என்றார்கள். – மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பலி ஒட்டகம் கொண்டுசெல்லப்பட்டது” என்று (ஐயப்பாடின்றி) ஹதீஸ் ஆரம்பிக்கிறது. Book : 15