← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #305 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا وُهَيْبٌ، ح، وَحَدَّثَنَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا خَالِدٌ كِلَاهُمَا عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، بِهَذَا الْإِسْنَادِ، وَقَالَا فَيُلْقَوْنَ فِي نَهَرٍ يُقَالَ لَهُ: الْحَيَاةُ، وَلَمْ يَشُكَّا، وَفِي حَدِيثِ خَالِدٍ: «كَمَا تَنْبُتُ الْغُثَاءَةُ فِي جَانِبِ السَّيْلِ»، وَفِي حَدِيثِ وُهَيْبٍ: «كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِئَةٍ – أَوْ حَمِيلَةِ السَّيْلِ» Tamil-305 Shamila-184 JawamiulKalim-275
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் “அவர்கள் நஹ்ருல் ஹயாத் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள்” என்று ஐயப்பாடின்றி இடம்பெற்றுள்ளது. காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர்கள் வெள்ளத்தின் ஓரத்தில் குப்பைக் கூளங்கள் (மத்தியிலுள்ள வித்துகள்) முளைப்பதைப் போன்று” என்று இடம்பெற்றுள்ளது. உஹைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “களிமண் வெள்ளத்தில்” அல்லது “சேற்று வெள்ளத்தில்” மிதந்துவரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று” என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.