← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4534
4 – بَابُ كَرَاهَةِ قَوْلِ الْإِنْسَانِ خَبُثَتْ نَفْسِي حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، كِلَاهُمَا عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي، وَلَكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي» هَذَا حَدِيثُ أَبِي كُرَيْبٍ وقَالَ: أَبُو بَكْرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَذْكُرْ «لَكِنْ» – وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، بِهَذَا الْإِسْنَادِ Tamil-4534 Shamila-2250 JawamiulKalim-4187
பாடம் : 4 (மனக் குழப்பத்திலுள்ள) ஒரு மனிதர் (“என் மனம் அசுத்தமாகிவிட்டது” எனும் பொருள் பொதிந்த) “கபுஸத் நஃப்சீ”எனும் சொல்லை ஆள்வது வெறுக்கத்தக்கதாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) ஒருவர் (“என் மனம் அசுத்தமாகிவிட்டது” எனும் பொருள் பொதிந்த) “கபுஸத் நஃப்சீ” எனும் சொல்லைக் கூற வேண்டாம். மாறாக, (“என் மனம் கனத்துவிட்டது” எனும் பொருள் கொண்ட) “லகிசத் நஃப்சீ” எனும் சொல்லையே கூறட்டும். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “மாறாக” எனும் சொல் இடம்பெறவில்லை. – மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. Book : 40