← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4698
அத்தியாயம்: 43
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَمِّي لَنَا نَفْسَهُ أَسْمَاءً، فَقَالَ: «أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ، وَالْمُقَفِّي، وَالْحَاشِرُ، وَنَبِيُّ التَّوْبَةِ، وَنَبِيُّ الرَّحْمَةِ»
அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பல பெயர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். “நான் “முஹம்மத்” (புகழப்பட்டவர்), “அஹ்மத்” (இறைவனை அதிகமாகப் போற்றுபவர்), “முகஃப்பீ” (இறுதியானவர்), “ஹாஷிர்” (ஒன்றுதிரட்டுபவர்), “நபிய்யுத் தவ்பா” (பாவமன்னிப்புடன் வந்த தூதர்), “நபிய்யுர் ரஹ்மத்” (இரக்கத்துடன் நடந்துகொள்ளுமாறு போதிக்க வந்த தூதர்) ஆவேன்” என்று கூறினார்கள்.