← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #782 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
حَدَّثَنِي أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ قُطْبَةَ بْنِ مَالِكٍ قَالَ صَلَّيْتُ وَصَلَّى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَأَ: ق وَالْقُرْآنِ الْمَجِيدِ. حَتَّى قَرَأَ: {وَالنَّخْلَ بَاسِقَاتٍ} [ق: 10]. قَالَ: فَجَعَلْتُ أُرَدِّدُهَا وَلَا أَدْرِي مَا قَالَ Tamil-782 Shamila-457 JawamiulKalim-700
குத்பா பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நான் தொழுதேன்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அப்போது) எங்களுக்குத் தொழுவித்தார்கள். (அத்தொழுகையில்) காஃப் வல்குர்ஆனில் மஜீத் (என்று தொடங்கும் 50ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். அதில் வந்நக்ல பாசிகா(த்)தின் எனும் (10ஆவது) வசனத்தை அன்னார் ஓதியபோது, நானும் அதைத் திரும்ப ஓதலானேன்; ஆனால், அவர்கள் ஓதிய(தன் பொருள் என்னவென்ப)து எனக்குப் புரியவில்லை.