حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَنْ مَاتَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ: الكِبْرِ، وَالغُلُولِ، وَالدَّيْنِ دَخَلَ الجَنَّةَ
وَفِي البَاب عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ الجُهَنِيِّ
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16717- ஸாலிம் பின் அபுல் ஜஃத் பலமானவர் என்றாலும் ஸவ்பான் (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை செவியேற்கவில்லை என இமாம் அஹ்மத், பிறப்பு ஹிஜ்ரி 164 இறப்பு ஹிஜ்ரி 241 வயது: 77 புகாரீ, பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 அபூஹாத்திம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195 இறப்பு ஹிஜ்ரி 277 வயது: 82 போன்றோர் கூறியுள்ளனர். மேலும் இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164 இறப்பு ஹிஜ்ரி 241 வயது: 77 அவர்கள் ஸாலிமுக்கும், ஸவ்பான் (ரலி) அவர்களுக்கும் இடையில் மஃதான் பின் அபூதல்ஹா இடம்பெறவேண்டும் என்று கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுல் கமால் 10/130) எனவே இதில் மஃதான் விடப்பட்டுள்ளதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். ஸாலிமுக்கும், ஸவ்பான் (ரலி) அவர்களுக்கும் இடையில் மஃதான் என்பவர் கூறப்பட்டும் இந்த செய்தி வந்துள்ளது. அவை சரியானவைகளாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34194- கத்தாதா தத்லீஸ் செய்பவர் என்றாலும் இவரிடமிருந்து ஷுஃபா அவர்கள் அறிவிப்பது சரியானவையாகும். காரணம் ஷுஃபா அவர்கள், கத்தாதாவிடமிருந்து தத்லீஸ் செய்யாத செய்திகளையே அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். இந்த செய்தியை முஸ்னத் அஹ்மத்- , முஸ்னத் பஸ்ஸார்- ஆகிய எண்களில் கத்தாதாவிடமிருந்து ஷுஃபா அவர்கள் அறிவித்துள்ளார் என்பதால் இது சரியான செய்தியாகும். மேலும் பார்க்க: அஹ்மத்-22428 Favorite
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)