← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2092
بَابُ مَا جَاءَ فِي مِيرَاثِ البَنَاتِ حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنِي زَكَرِيَّا بْنُ عَدِيٍّ قَالَ: أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: جَاءَتْ امْرَأَةُ سَعْدِ بْنِ الرَّبِيعِ بِابْنَتَيْهَا مِنْ سَعْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، هَاتَانِ ابْنَتَا سَعْدِ بْنِ الرَّبِيعِ، قُتِلَ أَبُوهُمَا مَعَكَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا، وَإِنَّ عَمَّهُمَا أَخَذَ مَالَهُمَا، فَلَمْ يَدَعْ لَهُمَا مَالًا وَلَا تُنْكَحَانِ إِلَّا وَلَهُمَا مَالٌ، قَالَ: «يَقْضِي اللَّهُ فِي ذَلِكَ» فَنَزَلَتْ: آيَةُ المِيرَاثِ، فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمِّهِمَا، فَقَالَ: «أَعْطِ ابْنَتَيْ سَعْدٍ الثُّلُثَيْنِ، وَأَعْطِ أُمَّهُمَا الثُّمُنَ، وَمَا بَقِيَ فَهُوَ لَكَ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، وَقَدْ رَوَاهُ شَرِيكٌ أَيْضًا، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ
ஸஃது பின் ரபீஉ (ரலி) அவர்களின் மனைவி ஸஃதின் மூலம் தனக்குப் பிறந்த இரு பெண் பிள்ளைகளுடன் வந்து “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இவ்விருவரும் ஸஃது பின் ரபீஉ அவர்களின் (மூலம் எனக்குப் பிறந்த) புதல்விகள். இவர்களின் தந்தை ஸஃது, உஹதுப் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். (அறியாமைக்கால வழமைப்படி) இந்தப் பெண்களுக்கு எந்தப் பொருளையும் தராமல் அவரது சொத்து முழுவதையும் அவருடன் பிறந்த சகோதரர் எடுத்துக் கொண்டார். இவ்விருவரின் சொத்துகளுக்காகவே எவரும் திருமணம் செய்ய முன்வருவார்கள்” என முறையிட்டார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இது விஷயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான்” எனக் கூறினார்கள். அப்போதுதான் சொத்துரிமை பற்றிய (4 :11.12-வது) குர்ஆன் வசனங்கள் இறக்கி அருளப்பட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், அப்பெண்களின் சிறிய தந்தையிடம் ஆளனுப்பி, ஸஃதின் புதல்விகள் இருவருக்கும் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கும், (ஸஃதின் மனைவியான) அவ்விரு பெண்பிள்ளைகளின் தாயாருக்கு எட்டில் ஒரு பங்கும் கொடுத்துவிட்டு மீதியை அவர் எடுத்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)