பாடம்: 48
بَابُ مَا جَاءَ فِي صُحْبَةِ المُؤْمِنِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَخْبَرَنَا ابْنُ المُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ قَالَ: حَدَّثَنِي سَالِمُ بْنُ غَيْلَانَ، أَنَّ الوَلِيدَ بْنَ قَيْسٍ التُّجِيبِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ، قَالَ سَالِمٌ: أَوْ عَنْ أَبِي الهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«لَا تُصَاحِبْ إِلَّا مُؤْمِنًا، وَلَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيٌّ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ هَذَا الْوَجْهِ
இறைநம்பிக்கையாளருடன் நட்பு கொள்வது தொடர்பாக வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்! உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம். இந்த ஹதீஸ் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. திர்மிதீ இமாம் கூறுகிறார்: இது “ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இந்த ஹதீஸ் இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்திருப்பதாக நாம் அறிகிறோம்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)