பாடம்: 3
بَابُ مَا جَاءَ فِي كِتْمَانِ العِلْمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بُدَيْلِ بْنِ قُرَيْشٍ اليَامِيُّ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُمَارَةَ بْنِ زَاذَانَ، عَنْ عَلِيِّ بْنِ الحَكَمِ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ عَلِمَهُ ثُمَّ كَتَمَهُ أُلْجِمَ يَوْمَ القِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ»
وَفِي البَابِ عَنْ جَابِرٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ»
கல்வியை (பிறருக்குக் கற்பிக்காமல்) மறைப்பதைக் குறித்து வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரிடம் அவர் அறிந்திருக்கும் அறிவு ஒன்றைக் குறித்து கேள்வி கேட்கப்பட்டு அதை அவர் சொல்லாமல் மறைத்தால், மறுமை நாளில் அவருக்கு (நரக) நெருப்பினாலான கடிவாளம் பூட்டப்படும். திர்மிதீ இமாம் கூறுகிறார்: இப்பாடப் பொருள் தொடர்பான நபிமொழி, ஜாபிர் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தி “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)